Cultural

Porto Placeholder View Project...

39 ஆவது ஆண்டுவிழா 2018

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் எமது ஆண்டுவிழாவினைக் கொண்டாடிவருகிறோம். தமிழ்ச்சங்கத்தின் 39ம் வருட ஆண்டு விழா 27.10.2018 அன்று Lillestrøm kultursenter மண்டபத்தில் 600க்கும் அதிகமான பார்வையாளர்களுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் நோர்வேயின் பிரபல நாடகக்கலைஞர்களின் தயாரிப்பில் உருவாக நகைச்சுவைநாடகமான “Facebook மாப்பிள்ளை” நாடகம் மேடையேறவுள்ளதுடன், சிவாஞ்சலிநரதனாலயா வினது நடனமும், “நீயா நானா” தொலைக்காட்சிப்புகழ் கோபிநாத் அவர்களின் விவாத அரங்கும், தென்னிந்தியப்பாடகர்களான திரு. முகேஸ், சுர்முகி, லண்டன் வாழ் ஈழத்துப்பாடகரான கஜன், மற்றும் நோர்வோழ் தமிழ்ப்பாடகர்களும் இணைந்து நடாத்தும் இசை நிகழ்வும் நடைபெறவுள்ளது. இலங்கையில் சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற “கண்டிக் கலவரம்” நூலின் எழுத்தாளரும் நோர்வேயில் வாழ்பவருமான சரவணன் கோமதி நடராசா அவர்களை... read more

Porto Placeholder View Project...

39வது சித்திரைப் புத்தாண்டு விழா 2018

New York

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் சித்திரை வருடப்பிறப்பினை சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். தமிழ்ச்சங்கத்தின் 39ம் வருட சித்திரை விழா 21.04.2018 அன்று Ullensaker kulturhus (Jessheim) மண்டபத்தில் 450க்கும் அதிகமான பார்வையாளர்களுடன் சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக அண்மையில் மறைந்த நாடக்கலைஞர் திரு. ராகவன் செல்லையா அவர்களை நினைவுகொண்டு கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமதி. …. அவர்களுக்கு தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் நினைவுப்பட்டயம் வழங்கிக் கௌரவித்தார். Dans for Ever, கலாசாதனா, Royal motion ஆகிய நடனக்குழுக்களின் நடனங்களுடன், facebook/Youtube பிரபல நகைச்சுவையாளர்களான Daniel Yogathas மற்றும் அவரது தாயர், துணைவியார் ஆகியோரின் AngryMum நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நடைபெற்ற இசைவிருந்து நிகழ்வில் தாயகத்தில் இருந்து TMS... read more

Porto Placeholder View Project...

39வது தைப்பொங்கல் விழா 2018

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தமிழர்களின் விழாவான உழவர் திருநாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். தமிழ்ச்சங்கத்தின் 39ம் வருட உழவர்திருநாள் 20.01.2018 அன்று Lørenskog hus மண்டபத்தில் மாலை 05:00 மணிக்கு ஆரம்பமாகி 22:00க்கு முடிவுற்றது. இந்நிகழ்வில் பின்வரும் நிகழ்வுகள் நடைபெற்றன. திருமதி சிவமலர் மனோகரனின் மாணவ மாணவியரின் சங்கீத இசைவிருந்து, நித்திய சதங்கை நர்த்தனாலயாவின் நடனம், பரதநர்த்தநாலயா மாணவிகளின் Fusion நடனம், Måløy gutter என்னும் நடனக்குழுவின் நடனம், கலாசாதனா மாணவிகளின் தில்லானா, யாழினி பாலேந்திரன், அபிராமி கஜேந்திரன் “அது அப்படித்தான்” நாடகம், இராக சங்கமம் இசைநிழ்வு. இந்நிகழ்வின்போது லண்டன்வாழ் தாயத்துப் பாடகர் கஜன் அவர்களும், தென்னிந்திய சுரத்தட்டுக்கலைஞர் சிவா ஆகியோருடன்நோர்வே வாழ் எம்மவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் read more