அன்புடையீர்,
அடைக்கலம்/அகதி தகமை கோருவோர்
அடைக்கல/அகதி மனு நிராகரிக்கப்பட்டு நாட்டுக்கு எந்நேரத்திலும் திருப்பி அனுப்பப்படலாம் என்ற நிலைமையில் முகாமிலிருந்த நம் நாட்டுப் பெண்மணி ஒருவர் தன்னையும் தன் குழந்தையையும் தீமூட்டி இறந்தமையும், மேலும் பலர் தொடர்ந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதும் (deported) நீங்கள் அறிந்ததே.
மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch) தனது அண்மைய அறிக்கையில் இலங்கையில் தற்போதுள்ள மனித உரிமை மீறல்கள் மிக மோசமானது என்றும் அந்நாட்டுக்கு அடைக்கல/அகதி மனு நிராகரிக்கப்பட்டுள்ளோர் திருப்பி அனுப்பப்படக்கூடாது என்றும் கோரியுள்ளனர்.
அங்கிருந்து அரசினால் தங்கள் மீது மேட்கோள்ளப்பட்ட அடக்குமுறை,இனவேறுபாடு, தாக்குதல்,சித்திரவதை,வன்புணர்வு,கடத்தல்,கொலை,இனஒழிப்பு போன்றபல குற்றங்களிலிருந்தும் தப்ப எத்தனித்து வெளியேறியவர்களை மீண்டும் அதே நாட்டுக்கு திருப்பி அனுப்புவது சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் (Universal Declaration of Human Rights) ஒரு சரத்திற்கு, 'மீண்டும் கஷ்டத்துக்கு உள்ளாக்கல்(refoulment)' என்பதனை மீறுவதாகும்.
அவுஸ்திரேலிய நாட்டினைப் பொறுத்தவரை அடைக்கல/அகதி மனு மறுக்கப்பட்ட ஒருவர் கூட திருப்பி அனுப்பப்படவில்லை என அறிகிறோம்.
இந்தப் பின்னணியில் நோர்வே நாட்டைப் பொறுத்தவரையில், முன் எப்போதும் இல்லாத அளவில் மனித உரிமை மீறல்கள் தமிழர்க்கு எதிராக அரச படையினர்,துணைப் படையினரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், அவர்களை திருப்பி அனுப்பாமல் இருப்பது இலங்கையில் சமாதானத்தினை ஏற்படுத்த முயன்று தவறிய நோர்வேயின் சட்டபூர்வமானதும்,தார்மிகக் கடைமையுமாகும்(legal and moral duty).
இந்நிலை பற்றிப் பேசி, நோர்வே நாட்டு அரசினை, முக்கியமாக நீதி அமைச்சினை (Justice Ministry) அணுகி நல்லதொரு தீர்வினை அடைய முயல்வது நோர்வே தமிழ் அமைப்புக்களின் கடமையாகும் என கருதி 'நோர்வே தமிழ் சங்கம்' எதிர்வரும் ௨௪(24) ஆம் திகதி (24.03.2012) சனிக்கிழமை மாலை கூட்டமொன்றினை ஏற்பாடு செய்கிறோம். அத்தருணம் உங்கள் அமைப்பிலிருந்து பிரதிநிதி ஒருவர் தவறாது சமூகம் தந்து தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து உதவுமாறு தயை கூர்ந்து அழைக்கிறோம்.
சிவபாலன் காசிநாதர்,
ஒருங்கிணைப்பாளர்-அரசியல்,
நோர்வே தமிழ் சங்கம்.
தொலை பேசி: 21382728,
செல்லிடத் தொலைபேசி: 94722390
பி.கு. நேரம், இடம் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்.