கல்தோன்றி மண்தோன்றா முன்தோன்றி மூத்தகுடியாகிய, எம்குடி தமிழினம் உலகப் பரப்பெங்கும் வாழ்கிறது. ஆனால், எங்குமே தன்னினத் தனித்துவத்துடன் தன்னாட்சியில் வாழுகிற வாய்ப்பிழந்து வாழ்கிறது. இந்நிலையில் கடந்த மூன்று பத்தாண்டுகளில் ஈழத்தீவின் அரட்டுகோன்மை (அரசபயங்கரவாதம்) கரணியமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் உலகப்பந்தின் அனைத்து
முனைகளிலும் வாழ்கின்றனர். பல்வேறு நாகரிகம்; பல்வேறு கலையொழுக்க மரபு (கலாசாரம்); பல்வேறு சூழல்மொழி; பல்வேறு கற்கைமொழி என்ற நிலையில் வாழ்கின்றனர். இதனால், ஈழத்தமிழர் குமுகாயம் பல்வேறு குழுக்களாகப் பிரிந்துவிடக்கூடிய பேரிடர் ஒன்றிருந்தது. இருக்கிறது.
ஒரு மாந்தனது உணர்வுகளின் உயிர்ப்பு அவனது இனமொழியிலேயே இயல்பாக அமைந்தள்ளது. இது புத்துலகக் கல்வியியல் நுட்புநர்களின் முடிபு.
எம்மினம் இரண்டாயிரங்களுக்கு முன் உயர்ந்து வாழ்ந்தபோதும் பிறநாட்டினர் வாழ்வும் வளமும் தேடித் தமிழகத்தைச் சூழ்ந்தனர். பின் ஆரியத்தாலும் அயலகத்தாராலும் தமிழினம் வீழ்த்தப்பட்டு தமிழகம் மாற்றாரால் நிறைந்தது. இத்தகைய ஒருநிலை உலகில் தமிழினத்துக்கே ஏற்பட்டிருக்க முடியும். இவற்றை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.இது ஒரு தொடக்கமே....